Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Community Development

குடிசைகளை விற்பனை செய்யும் அதிகாரம் வழங்க வேண்டும் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

Print PDF

தினகரன் 20.08.2010

குடிசைகளை விற்பனை செய்யும் அதிகாரம் வழங்க வேண்டும் எம்.எல்..க்கள் கோரிக்கை

மும்பை,ஆக.20: மும்பையில் குடிசைகளை விற்பனை செய்வதற்கு இருக்கும் விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்று எம்.எல்..க்கள், முதல்வர் அசோக் சவானிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தாராவி மற்றும் விமான நிலையத்தை ஒட்டிய பகுதி யில் இருக்கும் ஆயிரக் கணக்கான குடிசைகளை கணக்கெடுப்பு நடத்தியதில் அவற்றில் பெரும்பாலான குடிசைகள் 1995ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டதாக இருந்தாலும் அவற்றை பலர் விற்பனை செய்துள்ளனர். புதிதாக ஒருவர் குடிசை களை விலைக்கு வாங்கி இருந்தால் அவர் குடிசை புனரமைப்பு திட்டத்தின் கீழ் மாற்று வீடு பெற தகுதியற்றவராகவே கருதப்படுகிறார். புதிதாக குடிசைகளை வாங்கியவர் மராத்தியராக இருந்தாலும் அவரும் குடிசை புனர மைப்பு திட்டத்தின் பயன்பெற முடியாமல்து. இதனால் தான் தாராவி குடிசை புனரமைப்பு திட்டம் கிடப்பில் இருந்து வருகிறது. சட்டப்படி 1995ம் ஆண்டு வரை கட்டப்பட்ட குடிசைகளுக்கு மாற்று வீடு வழங்கப்படுகிறது.

இதனை 2000ம் ஆண்டு வரை நீட்டித்து சில இடங்களில் குடிசைவாசி களுக்கு மாற்று வீடு கொடுக் கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு விதிப்படி குடிசைகள் 1995ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டு அதனை ஒருவர் விலைக்கு வாங்கி இருந்தால் அதற்கு குடிசை மாற்று திட்டத்தில் மாற்று வீடு கிடைக்காது.

இப்பிரச்னை குறித்து எம்.எல்..க்கள் சிலர் முதல்வர் அசோக்சவானை சந்தித்து பேசினர். அவர்கள், குடிசைவாசிகள் தங்களது வீடுகளை விற்பனை செய்யும் அதிகாரத்தை அரசு வழங்கவேண்டும் என்றும் குடிசைகளை புதிதாக விலைக்கு வாங்கு பவர்களுக்கும் குடிசை மாற்று திட்டதில் மாற்று வீடு கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண் டனர். இது தொடர்பாக அரசின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் முதல்வரிடம் எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். ஆனால் இதற்கு முதல்வர் அசோக் சவான் உடனே ஒப்புதல் கொடுக்க மறுத்து விட்டார். இது குறித்து விரிவாக விவாதித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப் படும் என்று அவர் தெரிவித் துள்ளார்.

Last Updated on Friday, 20 August 2010 07:32
 

சவணூர் நகரில் துப்புரவு பணியாளருக்கு வீட்டுமனை

Print PDF

தினகரன் 13.08.2010

சவணூர் நகரில் துப்புரவு பணியாளருக்கு வீட்டுமனை

ஹாவேரி, ஆக. 13: மாவட்டத்தின் சவணூர் நகரில் வசிக்கும் பங்கி வகுப்பினருக்கு அரசின் சார்பில் மனைபட்டா வழங்கப்பட்டது. மாநில நீர்பாசனதுறை அமைச்சர் பசவராஜ் பொம்மை வழங்கினார்.

சவணூர் நகரசபையில் துப்புரவு தொழிலாளர்களாக பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த பங்கி வகு ப்பினர் வசித்து வந்த குடிசை வீடுகளை அகற்றி விட்டு, அடுக்குமாடி கட்டிடம் எழுப்ப முடிவு செய்தனர்.

இதற்காக குடிசையை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பினர். இதை எதிர்த்து கடந்த மாதம் பங்கி வகுப்பை சேர்ந்த 5 பேர் மலத்தை உடலில் பூசி கொண்டு நகரசபை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு பங்கி வகுப்பினரின் கோரிக்கையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உள்பட பலர் குரல் கொடுத்தனர். இதை ஏற்று அரசின் சார்பில் வீட்டு மனைபட்டா வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

அரசின் சார்பில் வாக்குறுதி கொடுத்தும் ஒருமாதம் கடந்தும் பட்டா வழங்காமல் புறகணித்தால், வரும் சுதந்திர தினத்தன்று விதான சவுதா எதிரில் மலம் பூசி போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதில் விழித்து கொண்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக பட்டா வழங்க முடிவு செய்தது. அதன்படி நேற்று மாலை சவணூர் தாலுகா தாசில்தார் பிரசாந்த் நால்வார் தலைமையில் மாநில நீர்ப்பாசன துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை வீட்டு மனைபட்டா வழங்கினார். சமூகத்தில் யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதம் கிடையாது.

அனைவரும் ஒன்று என்ற தத்துவத்தை அரசு கடைப்பிடித்து வருகிறது. சமூகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பங்கி வகுப்பினருக்கு தேவையான சலுகைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

நகரில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பாடு பற்றி மதிப்பீடு

Print PDF

தினகரன் 12.08.2010

நகரில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பாடு பற்றி மதிப்பீடு

மும்பை, ஆக. 12: மும்பை யில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பாடு பற்றி மதிப்பீடு செய்ய எம்.எம்.ஆர்.டி.ஏ முடிவு செய்துள் ளது.

பொருளாதார வளர்ச்சி நிறைந்த நகரமாக மும்பை இருந்தாலும் கூட இங்கு வசிக்கும் மக்களில் குறிப்பிட்ட சதவீதத்தினரின் வாழ்க்கை தரம் வளர்ச்சி அடைந்ததாக இல்லை. இதனால் மும்பை பெருநகர பிராந்தியத்தில் மனிதவள மேம்பாடு எவ்வாறு இருக் கிறது என்பதை மும்பை பெருநகர பிராந்திய வளர்ச்சி ஆணை யம்(எம்.எம்.ஆர்.டி.) மதிப்பீடு செய்து அறிக்கை ஒன்றை தயாரிக்க உள்ளது.

இது பற்றி எம்.எம்.ஆர்.டி.ஏ கமிஷனர் ரத்னா கர் கெய்க்வாட் நேற்று கூறியதாவது:

மனிதவள மேம்பாடு பற்றி மதிப்பீடு செய்து அறிக்கை தயாரிக்க முக்கிய கமிட்டி ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் தற்போது நாங்கள் ஈடுபட்டுள் ளோம்.

பிறப்பு, கல்வி, எழுத்தறிவு மற்றும் மக்களின் வாங்கும் திறன் ஆகிய அம்சங்கள் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்படும். உண்மை நிலையை கருத்தில் கொண்டு, நீடித்து நிற்கும் மற்றும் சமச்சீரான வளர்ச்சி திட்டங்களை வகுக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

வளர்ச்சி என்பது பொரு ளாதார மேம்பாட்டை மட்டும் பிரதிபலிப்பதாக இருக்க கூடாது. மக்களின் வாழ்க்கைத்தரமும் மேம் பட்டதாக இருக்க வேண்டி யது அவசியம். எனவே இந்த மதிப்பீட்டை நடத்தினால் முதலீடு திட்டங்களை மறுஆய்வு செய்து எதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடை யாளம் காணமுடியும்.

மும்பை பெருநகர பிராந்தியத்தை மேலும் சிறந்ததாக்க திட்டமிட இந்த மனிதவள மேம்பாடு அறிக்கை ஒரு முக்கிய கருவியாக இருக்கும். இவ் வாறு அவர் கூறினார்.

 


Page 11 of 18