Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.6 கோடியில் 9 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தி  இந்து     20.07.2017

ரூ.6 கோடியில் 9 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகரப் பகுதியில் கூடுதலாக 9 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை ரூ.6 கோடியே 90 லட்சம் செலவில் அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மாநகராட்சி பராமரிப்பில் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சராசரியாக தினமும் சிகிச்சைக் காக 160 புறநோயாளிகள் வருகின்றனர். அனைத்து சுகாதார நிலையங்களிலும் சேர்த்து மாதம் சுமார் 4 லட்சத்து 63 ஆயிரம் நோய்களிலும், ஆண்டுக்கு 55 லட்சம் 80 ஆயிரம் நோயாளிகளும் சிகிச்சைக்காக வருகின்றனர். நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவரைப் பார்க்க நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி யுள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி சார்பில் மேலும் 9 இடங்களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

நோயாளிகள் காத்திருக்காமல் விரைவாக மருத்துவர்களைப் பார்த் துச் செல்லவும், நோயாளிகள் எளிதில் அணுகும் வகையில் அரு காமைப் பகுதியில் மருத்துவ மனைகள் இருக்க வேண்டும் என்பதற்காகவும் மேலும் 9 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க இருக்கிறோம். அவை 11-வது வார்டு (திரு வொற்றியூர்), 14-வது வார்டு (மல்லிகாபுரம்), 34-வது வார்டு (விவேகானந்தர் நகர்), 36-வது வார்டு (சர்மா நகர்), 48-வது வார்டு (வி.ஆர்.நகர்), 153-வது வார்டு (போரூர் சக்தி நகர்), 145-வது வார்டு ( நெற்குன்றம் பெருமாள் கோயில் தெரு), 197-வது வார்டு (நங்கநல்லூர்), 155-வது வார்டு (ராயபுரம் பஜனை கோயில் தெரு) ஆகிய இடங்களில் கட்டப்பட உள்ளன என்றார்.