தினமலர் 07.04.2017
உள்ளாட்சிகள் அதிகாரம் வீட்டு வாரியத்துக்கு மாற்றம்
தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில், குடியிருப்பு திட்டங்களை, வீட்டுவசதி
வாரியம் செயல்படுத்தி வருகிறது. தற்போது, சென்னை நொளம்பூர் புறநகர்
திட்டத்தில், 84 வீடுகள்; அரியலுார் மாவட்டம், கரும்பஞ்சாவடியில், 171
வீடுகள்; தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், 10 வீடுகள்.காஞ்சிபுரம்
புறநகர் திட்டத்தில், 141 வீடுகள் உட்பட, சில திட்டங்கள், தற்போது
செயல்பாட்டில் உள்ளன. இத்திட்டங்களை, நிர்ணயிக்கப்பட்ட காலகெடுவுக்குள்
நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. அதற்கு காரணம், திட்டங்களுக்கான அனுமதி
விண்ணப்பம் பெறுவது, ஒப்புதல் அளிப்பது, கட்டு மான பணியை
நெறிப்படுத்துவது, சாலைகள் அமைப்பது, பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்புகள்
வழங்குவது, மின் இணைப்பு வழங்குவது போன்ற அதிகாரங்கள், சம்பந்தப்பட்ட
பகுதியின் உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ளன.திட்ட பணிகளை விரைந்து
முடிக்கவும், நிர்வாக வசதிக்காகவும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்த
அதிகாரங்களை, வீட்டுவசதி வாரியத்துக்கு கூடுதலாக வழங்கி, தமிழக அரசு
உத்தரவிட்டு உள்ளது. இதற்கான அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்புகளை
வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ளது.
அதிருப்தி :
திருவள்ளூர் மாவட் டம், திருமழிசை துணை நகர திட்டத்தை தொடர்ந்து தற்போது,
ஐந்து குடியிருப்பு திட்டங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம்
வீட்டுவசதி வாரியத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அரசியல் சட்டப்படி,
உள்ளாட்சிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை, வீட்டுவசதி வாரியம்
கைப்பற்றுவது, உள்ளாட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை
ஏற்படுத்தி உள்ளது.