Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெ.நா.பாளையத்தில் பாலித்தீன் பொருள்கள் பறிமுதல்

Print PDF
தினமணி         28.11.2014

பெ.நா.பாளையத்தில் பாலித்தீன் பொருள்கள் பறிமுதல்

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் இருந்து வியாழக்கிழமை பாலித்தீன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார், செயல் அலுவலர் துவாரகநாத் சிங் ஆகியோரின் உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் தலைமையில் மேற்பார்வையாளர் மகாதேவன், வரிவிதிப்பு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் சொக்கலிங்கேஸ்வர் கோவில் வீதி, எல்.எம்.டபிள்யு சாலை, இந்திரா காந்தி வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.இதில், கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கேரிபேக்குகள், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாலித்தீன் பொருள்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.