Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேலப்பாளையம் மாட்டுச்சந்தையில் மாநகராட்சி ரூ.1.11 லட்சம் வசூல்

Print PDF
தினமணி       17.09.2014

மேலப்பாளையம் மாட்டுச்சந்தையில் மாநகராட்சி ரூ.1.11 லட்சம் வசூல்

திருநெல்வேலி மாநகராட்சி கையகப்படுத்திய மாட்டுச்சந்தை மூலம் ஒரு நாள் வசூலாக ரூ.1.16 லட்சம் கிடைத்துள்ளது.

மேலப்பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாட்டுச்சந்தையின் கட்டணம் வசூலிக்கும் உரிமை தொடர்பாக தனியார் ஒப்பந்ததாரர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதையடுத்து, கட்டண உரிமையை மாநகராட்சி ஏற்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், சந்தையை மாநகராட்சி கையகப்படுத்தக் கோரி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், உடனடியாக சந்தையை கடந்த 12ஆம் தேதி மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக, செவ்வாய்க்கிழமை மாநகராட்சி மூலம் சந்தையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. திங்கள்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை வரையிலான ஒரு நாளில் மட்டும் கட்டணம் மூலம் மாநகராட்சிக்கு ரூ.1.11 லட்சம் கிடைத்தது. 1,544 மாடுகள், 1,600 ஆடுகள், 146 கோழிகள் மற்றும் அவற்றை ஏற்றி வந்த வாகனங்கள் மூலம் இந்தக் கட்டண வசூல் கிடைத்துள்ளது.