Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

'ரூ.29 கோடி பாக்கியை வசூலிங்க...'மாநகராட்சிக்கு அரசு கிடுக்கிப்பிடி

Print PDF

தினமலர்      13.09.2014

'ரூ.29 கோடி பாக்கியை வசூலிங்க...'மாநகராட்சிக்கு அரசு கிடுக்கிப்பிடி

மதுரை: மதுரை மாநகராட்சியில் கிடப்பில் இருக்கும் ரூ.29 கோடியை உடனே வசூலிக்க அரசு தரப்பில் வலியுறுத்தியுள்ளதால் நேற்று கமிஷனர் கதிரவன் அவசர கூட்டம் நடத்தினார்.மாநகராட்சியில் கட்டுமானம் தொடர்பான அனுமதி மற்றும் ஒப்புதல் பெற வருவோர் 'உள்கட்டமைப்பு மேம்பாடு' கட்டணம் செலுத்த வேண்டியது கட்டாயம். இதுதொடர்பான அரசின் ஆணை நடைமுறையில் இருந்த போதும் மாநகராட்சியில் அதை கடந்த காலங்களில் பின்பற்றவில்லை.வணிக வளாகம், குடியிருப்புகளுக்கு என அளவைக்கு ஏற்பட கட்டணம் மாறுபடுகிறது. பெறப்படும் கட்டணம் மூலம் மாநகராட்சியின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்திக் கொள்ளலாம். தவிர அது தொடர்பான அறிக்கையை அரசுக்கும் சமர்ப்பிக்க வேண்டும்.அந்த வகையில் மதுரையில் ரூ.29 கோடி உட்கட்டமைப்பு மேம்பாடு கட்டணம் பாக்கி இருப்பது அரசுக்கு தெரியவந்துள்ளது. உடனே அவற்றை வசூலிக்க அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து கமிஷனர் கதிரவன் நேற்று நகரமைப்பு பிரிவினர் மற்றும் வருவாய் பிரிவினருடன் அவசர கூட்டம் நடத்தினார். பாக்கியுள்ள ரூ.29 கோடியை வசூலிக்க உத்தரவிட்ட கமிஷனர், அது தொடர்பான சம்மந்தப்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Last Updated on Monday, 15 September 2014 07:11