தினமணி 04.09.2014
சொத்து வரி முரண்பாடுகளைக் களைய சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள்
சொத்து வரி விவரங்களில் உள்ள முரண்பாடுகளைக் களைய சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
2014-15-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியைச் செலுத்தும் காலக்கெடு முடிவடைந்துவிட்டது. எனவே, நிலுவைத் தொகை இருந்தால், அதை மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டும்.
மேலும் ஏற்கெனவே செலுத்தப்பட்ட சொத்து வரி விவரத்தில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், அதை சம்பந்தப்பட்ட உதவி வருவாய் அலுவலருக்குத் தெரிவிக்கலாம். இதற்காகத் தனியே சிறப்பு முகாம்கள் செப்டம்பர் மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் நடத்தப்படும். முகாம்கள் மண்டல அலுவலகங்களில் நடைபெறும்.
காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் உரிய விவரங்களுடன் உதவி வருவாய் அலுவலரை அணுகலாம்.
மேலும் விவரங்களுக்கு 1913 என்ற இலவச எண்ணிலோ, www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்திலோ தொடர்பு கொள்ளலாம்.
மண்டலம் உதவி வருவாய் கோட்டங்கள் கைப்பேசி அலுவலர்
1 எஸ். பாஸ்கரன் 1 முதல் 14 9445190081
2 என். பாலசந்தர் 15 முதல் 21 9445190082
3 என். பாலசந்தர் 22 முதல் 33 9445190083
4 ஆர். மோகன் சாய் 34 முதல் 48 9445190084
5 கே. சுந்தர்ராஜ் 49 முதல் 63 9445190085
6 எஸ். ரவி 64 முதல் 78 9445190086
7 எம்.டி. கிஷோர் குமார் 79 முதல் 93 9445190087
8 கே.பி. பானுசந்திரன் 94 முதல் 108 9445190088
9 பி.பி. மகேந்தர் 109 முதல் 126 9445190089
10 கே. ரவிச்சந்திரன் 127 முதல் 142 9445190090
11 ஜி.டி. கிரிதர் 143 முதல் 155 9445190091
12 அந்தோணி அற்புதராஜ் 156 முதல் 167 9445190092
13 பி. தமிழ் 170 முதல் 182 9445190093
14 பி. ஜோசப் தங்கராஜ் 168, 169, 183, முதல் 191 9445190094
15 எம்.கே. அப்துல் ரவூப் 192 முதல் 200 9445190095