Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் ஒழிப்பில் ஈடுபட்ட சிறந்த மகளிர் குழுவுக்கு ரூ.5 லட்சம் பரிசு

Print PDF

தினத்தந்தி           17.02.2014

பிளாஸ்டிக் ஒழிப்பில் ஈடுபட்ட சிறந்த மகளிர் குழுவுக்கு ரூ.5 லட்சம் பரிசு

சுற்றுச்சூழல் துறை மூலமாக பிளாஸ்டிக் பயன்பாடுகள் இல்லாத பகுதிகளாக மாற்றும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள சிறந்த 3 மகளிர் சுய உதவிக்குழுக்களை மாநில அளவில் தேர்வு செய்து ரொக்கப்பரிசுகள் வழங்க தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார். முதல் பரிசாக ரூ.5 லட்சம், 2–வது பரிசாக ரூ.3 லட்சம், 3–வது பரிசாக ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் உபயோகிப்பதை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். தங்கள் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி மையத்துக்கு அனுப்பும் செயல்களில் ஈடுபட்டு இருக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான மாற்றுப் பொருளான காகித பை, காகித தம்ளர், துணிப்பை, சணல் பை போன்ற ஏதேனும் ஒரு பொருளை தயாரிக்கும் சுயஉதவிக்குழுவாக இருக்கலாம்.

இந்த தகுதிகளை உடைய சுய உதவிக்குழுக்கள், உரிய விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் யூனியன் அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பரிந்துரையுடன் நெல்லை மாவட்ட மகளிர் திட்ட அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை, நெல்லை மாவட்ட கலெக்டர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார்.