தினகரன் 14.02.2014
ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆலந்தூர், : ஆதம்பாக்கம் குளம் அருகே மாநகராட்சி அனுமதி இன்றி கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடத்தின் அடித்தளம் இடித்து தள்ளப்பட்டது.
ஆதம்பாக்கம் கிழக்கு கரிகாலன் தெருவில் ஒரு குளம் உள்ளது. இதன் நுழைவாயில் அருகே புதிய ஆக்கிரமிப்பு கட்டிடம் முளைத்தது. அடித்தளம்வரை கட்டப்பட்ட இந்த கட்டிடம் மாநகராட்சி அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதையடுத்து மண்டல செயல் பொறியாளர் மகேசன், உதவி செயற் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, இளநிலை பொறியாளர் சேதுபதிராஜா ஆகியோர் நேற்று அந்த இடத்தைப் பார்வையிட்டு ஊழியர்கள் மூலம் அந்த கட்டிடத்தை இடித்து அகற்றினர்.