Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பல்லாவரம் நகராட்சியில் சிறுவிசை மின் குடிநீர் தொட்டி உயர்கோபுர மின்விளக்கு திறப்பு எம்பி நிதி ரூ.1 கோடியில் அமைத்தது

Print PDF

தினகரன்             08.02.2014 

பல்லாவரம் நகராட்சியில் சிறுவிசை மின் குடிநீர் தொட்டி உயர்கோபுர மின்விளக்கு திறப்பு எம்பி நிதி ரூ.1 கோடியில் அமைத்தது

பல்லாவரம், : ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு 2012-13ம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியில் சிறுவிசை மின் குடிநீர் தொட்டி மற்றும் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பல மாதங்களாக டெண்டர் விடமாலும், டெண்டர் எடுக்க வரும் ஒப்பந்ததாரர்களை எடுக்க விடமால் தடுத்து வந்தனர்.

இதையடுத்து திமுக சார்பில் கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு, ஆமை வேகத்தில் நடந்தன. பிறகு பணிகள் முழுவதுமாக முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் இருந்தது. இதுகுறித்து மீண்டும் கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டது.

இந்நிலையில், பல்லாவரம் நகராட்சியில் 10 வார்டுகளுக்கு சிறுவிசை மின் குடிநீர் தொட்டி மற்றும் உயர்கோபுர மின்விளக்கு திறப்பு விழா நேற்று நடந்தது. டி.ஆர்.பாலு கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் நகராட்சி தலைவர் இ.கருணாநிதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.