Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதாரமற்ற இறைச்சி அழிப்பு

Print PDF

தினகரன்                29.01.2014 

சுகாதாரமற்ற இறைச்சி அழிப்பு

சென்னை, : மாநகராட்சியின் 14வது மண்டலத்துக்குட்பட்ட பெருங்குடி, கொட்டிவாக்கம், பாலவாக்கம் ஆகிய பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் ஆடுகளை வெட்டி விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளில் நேற்று சோதனை நடத்தினர். அங்கு சுகாதாரமற்ற முறையில் ஆடுகளை கடைகளிலேயே வெட்டி விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து  150 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்தனர்.