தினமணி 29.01.2014
கூடலூர் நகராட்சியில் கூட்டு துப்புரவு இயக்கம்
கூடலூர் நகராட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை கூட்டு துப்புரவு இயக்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மேல்கூடலூர், ஓ.வி.ஹெச். சாலையில் உள்ள கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்து, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டன. சாலையோரப் புதர்கள் சுத்தம் செய்யப்பட்டன. இதில், நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எடிசன் அற்புதராஜ், ரமேஷ் மற்றும் மேற்பாற்வையாளர்கள் கலந்துகொண்டனர்.