Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.118 கோடியில் திட்டம்: முதல்வர்

Print PDF

மாலைச்சுடர்              02.01.2014

ரூ.118 கோடியில் திட்டம்: முதல்வர்
.
கோடநாடு, ஜன.2:  முதலமைச்சர் ஜெயலலிதா கோடநாடு முகாம் அலுவலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில் 15 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
.
மேலும், 64 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை துவக்கி வைத்து, 19 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களை திறந்து வைத்து, 18 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

நகர்ப்புறங்களில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப, அவர்களுக்கு நல்ல சுற்றுப்புற சூழலை ஏற்படுத்தும் விதத்தில், பொது சுகாதாரத்தைப் பராமரிப்பதிலும், பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவதிலும், அடிப்படைத் தேவைகளை நிறை வேற்றுவதிலும்  முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது.

தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியின் புதிய பேருந்து நிலையம் 7.35 ஏக்கர் நிலப்பரப்பில்  15 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த   பேருந்து நிலையத்தில் 59 பேருந்துகள் நிறுத்துவதற்கான இடவசதிகளுடன் உணவகங்கள், கடைகள், பயணிகள் காத்திருக்கும் அறை, பொருட்கள் வைப்பறை, நவீன கழிப்பிடம், முன்பதிவு மையங்கள், வரவேற்பு விசாரணை மையம், காவல் கட்டுப்பாட்டு அறை, ஓட்டுநர் ஓய்வு அறை, தகவல் தொடர்பு அலுவலர் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 முதலமைச்சர் ஜெயலலிதா 15.1.2013 அன்று தேனி மாவட்டம், லோயர் கேம்ப்பில் நடைபெற்ற கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு மண்டபம்   திறப்பு  விழாவில், தேனிஅல்லிநகரம் நகராட்சியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு கர்னல் ஜான் பென்னிகுயிக்  அவர்களின் நினைவை போற்றும் வகையில் கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில்  15 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

 திருவண்ணாமலை நகராட்சியில் 36 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,  கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி நகராட்சியில்  3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள்;காஞ்சிபுரம் நகராட்சியில் 17 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டம்; தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் திருவண்ணாமலை, செங்கம்-புதுப்பாளையம்  ஒன்றியங்களைச் சார்ந்த 20,314 பேர் பயனடையும் வகையில் 40 குடியிருப்புகளுக்கு  1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்; நாகப்பட்டினம், குத்தாலம் ஒன்றியத்தைச் சார்ந்த குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட 18 குடியிருப்புகளைச் சேர்ந்த  14,547 பேர் பயனடையும் வகையில் 3 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்;  6 மாவட்டங்களிலுள்ள 9 பேரூராட்சிகளில் 2 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள 10 குடிநீர் வழங்கல் மேம்பாட்டுப் பணிகள் என மொத்தம் 64 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை, திருவத்திப்புரம் நகராட்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம்; கன்னியாகுமரி, பத்மநாபபுரம்  நகராட்சியில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம்; நாமக்கல் மாவட்டம், திருசெங்கோடு நகராட்சியில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம்,17 மாவட்டங்களில் உள்ள 22 பேரூராட்சிகளில் 7 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 22 அலுவலகக் கட்டடங்கள்;

11 மாவட்டங்களில் உள்ள 34 பேரூராட்சிகளில் 4 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 41 சுகாதார வளாக கட்டடங்கள்; திருவாரூர், நன்னிலம் பேரூராட்சியில் 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிக வளாக கட்டடம்; காவேரிப்பட்டினம் மற்றும் குத்தாலம் பேரூராட்சிகளில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடங்கள்; 4 மாவட்டங்களில் உள்ள 5 பேரூராட்சிகளில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் நவீன இறைச்சி கூடங்கள்; தேனி, கெங்குவார்பட்டி பேரூராட்சியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் என மொத்தம் 19 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களை  முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மேலும்,  சேலம் மாநகராட்சியில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்,  கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில்  2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும்  கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஓசூர் நகராட்சியில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்  கட்டப்படவுள்ள  புதிய அலுவலகக் கட்டடங்கள்; ஈரோடு மாவட்டம்,  புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பேருந்து நிலையம்;   விருதுநகர் மாவட்டம்,  சிவகாசி நகராட்சியில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள  துப்புரவு பணியாளர்களுக்கான குடியிருப்புகள் என 18 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 09 January 2014 11:03