Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேரையூர் பேரூராட்சியில் 100 சதவீத வரிவசூல் 13வது ஆண்டாக சாதனை

Print PDF

தினகரன்                03.01.2014

பேரையூர் பேரூராட்சியில் 100 சதவீத வரிவசூல் 13வது ஆண்டாக சாதனை

திருமங்கலம், :பேரையூர் பேரூராட்சி தொடர்ந்து 13வது ஆண்டாக 100 சதவீதம் வரிவசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் பாலமேடு, டி.கல்லுப்பட்டி, எழுமலை, பேரையூர், பரவை உள்ளிட்ட ஒன்பது பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் பேரையூர் பேரூராட்சியில் இந்தாண்டு 100 சதவீதம் வரிவசூல் செய்து வரிவசூலில் மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த பேரூராட்சியில் வரியினங்கள் மூலம் 18 லட்சம் வசூலிக்க வேண்டும். இந்த இலக்கை பேரூராட்சி எட்டியுள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி தலைவர் குருசாமி கூறுகை யில், கடந்த ஜனவரி முதல் டிசம்பர் முடிய ஓராண்டில் பேரூராட்சியில் வரிவசூலில் 100 சதவீதம் வசூலித்து சாதனை படைத்துள் ளோம். ஏற்கனவே கடந்த 12 ஆண்டுகளாக எங்கள் பேரூராட்சி 100 சதவீதம் வசூலித்து சாதனை படைத்தது. இந்தாண்டு தொடர்ந்து 13ம் ஆண்டாக இந்த சாதனையை படைத்துள்ளோம்’ என்றார்.