Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலை மேம்பாட்டுப் பணிக்கு பூமிபூஜை

Print PDF

தினமணி              30.12.2013

சாலை மேம்பாட்டுப் பணிக்கு பூமிபூஜை

கரூரில் ரூ. 2.93 கோடியில் நடைபெறவுள்ள சாலை மேம்பாட்டு பணிக்கான பூமிபூஜையை போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.

கரூர் வட்டம் புலியூர் பேரூராட்சியில் ரூ. 1.70 கோடியில் வீரராக்கியம் முதல் சுக்காலியூர் வரை சாலை மேம்பாட்டுப் பணி, அப்பகுதியில் 3 சிறுபாலங்கள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற உள்ளன. பாலராஜபுரம் ஊராட்சியில் ரூ. 1.23 கோடியில் சிறுபாலம் கட்டுதல் மற்றும் 1.5 கி.மீ. தொலைவில் சாலை அமைத்தல் என மொத்தம் ரூ. 2.93 கோடியில் பணிகள் நடைபெற உள்ளன.

இதற்காக நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மு. அருணா தலைமை வகித்தார். கரூர் எம்.பி. தம்பிதுரை, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ  செ. காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ரவிகார்த்திகேயன், செயற்பொறியாளர்கள் ஜெய்குமார், பாலசுப்ரமணி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.