Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களில் 2025 டன் குப்பை

Print PDF

தினபூமி           06.11.2013

தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களில் 2025 டன் குப்பை

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Crackers(C).jpg 

மதுரை, நவ 6 - மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் தீபாவளி பண்டிகை தினத்தினை  முன்னிட்டு மூன்று நாட்களில் 2025 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளது 

  மதுரை மாநகராட்சி நான்கு மண்டலத்திற்குட்பட்ட 100 வார்டுகளில் இருந்து 90 டம்பர் பிளெசர்கள் 11 டிப்பர் லாரிகள் 5 காம்பெக்டர்கள் 37 டிராக்டர்கள் மற்றும் 37 ஆட்டோக்கள் என மொத்தம் 178 வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வெள்ளைக்கல்லில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் உரம் தயாரிக்க கொட்டப்பட்டு வருகிறது. 

  தற்போது தீபாவளி திருநாளை முன்னிட்டு மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 02.11.2013 அன்று 482 டன் குப்பைகளும் 03.11.2013 அன்று 537 டன் குப்பைகளும் 04.11.2013 அன்று 1006 குப்பைகளும் என மூன்று நாட்களில் மட்டும் 2025 டன் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளது.