Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மருத்துவமனை வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினகரன்          25.10.2013

மருத்துவமனை வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோபி,: கோபி நகராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனை வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

கோபி நகராட்சிக்குட்பட்ட பகுதியான கடைவீதி, யாகூப் வீதி, சாரதா மாரியம்மன் கோயில் வீதி சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்து நடைபாதை கடை வைத்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் கடந்த வாரம் கடை வீதி முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

ஆனாலும் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முறைத்தன. அரசு மருதுவமனைக்கு போக முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் நேற்று காலை நகராட்சி அதிகாரிகள் திடீரென அரசு மருத்துவமனை வீதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர். கடை முன்பு போடப்பட்டிருந்த பந்தல், சிமெண்ட் கூரை போன்றவற்றை உடனடியாக அப்புறப்படுத்தினர். இதே போன்று நகர் பகுதி முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.