Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேயர் விஜிலா சத்தியானந்த் தொடங்கி வைத்தார் நெல்லை போக்குவரத்து கோட்டத்துக்கு 26 புதிய பஸ்கள்

Print PDF

தினத்தந்தி           24.10.2013

மேயர் விஜிலா சத்தியானந்த் தொடங்கி வைத்தார் நெல்லை போக்குவரத்து கோட்டத்துக்கு 26 புதிய பஸ்கள்

நெல்லை அரசு போக்குவரத்து கோட்டத்துக்கு 26 புதிய பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன. அந்த பஸ்களை மேயர் விஜிலா சத்தியானந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

புதிய பஸ்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு 610 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளன. இந்த 610 புதிய பஸ்களின் சேவையை சென்னையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

நெல்லை அரசு போக்குவரத்து கழகத்துக்கு 26 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டன. இந்த பஸ்களின் தொடக்க விழா நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பணிமனையில் நேற்று நடந்தது.

மேயர் தொடங்கி வைத்தார்

நெல்லை மேயர் விஜிலா சத்தியானந்த் கொடி அசைத்து, 26 புதிய பஸ்களை தொடங்கி வைத்தார். அப்போது ஒரு பஸ்சில் ஏறி டிரைவர் இருக்கையில் அமர்ந்து, அந்த பஸ்சை மேயர் விஜிலா சத்தியானந்த் சற்று தூரம் ஓட்டினார்.

விழாவில் நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முத்துகருப்பன், அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், மாநகராட்சி துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், மண்டல தலைவர்கள் எம்.சி.ராஜன், தச்சை மாதவன், மோகன், ஹைதர்அலி, யூனியன் தலைவர் கல்லூர் வேலாயுதம், கூட்டுறவு ஒன்றிய மாநில துணை தலைவர் தச்சை கணேசராஜா, சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, ஜெயலலிதா பேரவை செயலாளர் சுதா பரமசிவன், முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர்முத்தையா, போக்குவரத்துகழக மண்டல மேலாளர்கள் டைட்டஸ், காளிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய பஸ்கள் நெல்லையில் இருந்து தேனி, மதுரை, சேலம், கோவை, திருச்செந்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்பட்டன.