Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாந­க­ராட்சி பள்ளி மாண­வர்­க­ளுக்கு மன கட்டுப்பாடு ‘கவுன்­சிலிங்’

Print PDF

தினமலர்                04.09.2013

மாந­க­ராட்சி பள்ளி மாண­வர்­க­ளுக்கு மன கட்டுப்பாடு ‘கவுன்­சிலிங்’

சென்னை:மாந­க­ராட்சி பள்ளி மாண­வர்­களின் மன­நிலை மாற்­றத்தை கட்­டுப்­ப­டுத்த, கவுன்­சிலிங் வழங்கும் பணிகள், இம்­மாதம் துவங்­கப்­பட உள்­ளன.

சென்னை மாந­க­ராட்சி பள்­ளி­களில், 9 முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாண­வி­ய­ருக்கு பொது கவுன்­சிலிங் வழங்கும் திட்டம் நடை­முறையில் உள்­ளது.

இந்த ஆண்டு, மாந­க­ராட்சி கட்­டுப்­பாட்டில் உள்ள, 70 உயர்­நிலை மற்றும் மேல்­நிலை பள்­ளி­களில், இந்த கவுன்­சிலிங் வகுப்­புகள், இம்­மாத இறுதிக்குள் துவங்­கப்­பட உள்­ளன.

கவுன்­சிலிங் செய்ய தகு­தி­யான நபர்­களை தேர்வு செய்யும் பணி நடந்து வரு­கி­றது. இதற்கு பி.எஸ்சி., மனோ­தத்­துவம் படித்­த­வர்கள் தேர்வு செய்­யப்­படுகின்­றனர். முதல்­கட்­ட­மாக, 80 விண்­ணப்­பங்கள் மாந­க­ராட்சிக்கு வந்­தன.

இதில், எட்டு பேர் மட்­டுமே தகு­தி­யா­ன­வர்­க­ளாக தேர்வு செய்­யப்­பட்­டனர். இரண்டாம் கட்ட நேர்­முக தேர்வு விரைவில் நடத்­தப்­பட உள்­ளது.

அதில், ஆறு பேர் தேர்வு செய்­யப்­பட உள்­ளனர். இவர்­களை கொண்டு மண்­ட­லத்­திற்கு இருவர் வீதம், ஏழு மண்டலங்­களில் உள்ள பள்­ளி­களில் கவுன்­சிலிங் வகுப்­புகள் நடை­பெறும்.

மதிய நேரத்தில் வகுப்­புகள் நடை­பெறும் என்றும், இதில், மாண­வர்­களின் தனிப்­பட்ட பிரச்­னைகள் கண்­ட­றி­யப்­பட்டு, அதில் இருந்து அவர்கள் மீள கவுன்­சிலிங் வழங்­கப்­படும் என்றும் கல்­வித்­துறை அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.