Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீட்டுவசதி வாரியம் கட்டிய கட்டிடம்: மத்திய அரசு நிறுவனத்துக்கு விற்பனை ரங்கசாமியிடம் நிதி வழங்கப்பட்டது

Print PDF

தினத்தந்தி               01.08.2013

வீட்டுவசதி வாரியம் கட்டிய கட்டிடம்: மத்திய அரசு நிறுவனத்துக்கு விற்பனை ரங்கசாமியிடம் நிதி வழங்கப்பட்டது

புதுவை வீட்டுவசதி வாரியம் முருங்கப்பாக்கம் வீட்டுவசதி திட்டப்பகுதியில் புதியதாக 8 கடைகள் மற்றும் அலுவலக வளாகத்தை கட்டி முடித்துள்ளது. இதன் முதல் தளத்தில் உள்ள 2 ஆயிரத்து 468 சதுர அடி பரப்பளவு கொண்ட அலுவலக வளாகத்தினை மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் (மத்திய புள்ளியல் மற்றும் அமலாக்க அலுவலகம்) புதுச்சேரி அலுவலகத்திற்கு விற்பனை செய்ய வாரியக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் சென்னை பிராந்திய அதிகாரிகளான துணை இயக்குனர் ஜெனரல் சுப்ரமணியன், துணை இயக்குனர் தயாளன் ஆகியோர் வீட்டுவசதி வாரிய தலைவர் மதி என்ற வெங்கடேசன், வாரிய செயலர் அகஸ்டின் லுசியன் தியாகு ஆகியோர் முன்னிலையில் முதல்–அமைச்சர் ரங்கசாமியிடம் ரூ.67லட்சத்து 90ஆயிரத்து 500–க்கான கேட்பு காசோலையை வழங்கினார்கள்.