Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் முதல் முறையாக குடிசையில்லா நகரமாக்கும் திட்டம் ஆலந்தூர் மண்டலத்தில் தொடக்கம்

Print PDF
தினகரன்           27.06.2013

மாநகராட்சியில் முதல் முறையாக குடிசையில்லா நகரமாக்கும் திட்டம் ஆலந்தூர் மண்டலத்தில் தொடக்கம்


ஆலந்தூர், : தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம், ராஜிவ் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஆலந்தூர் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடிசைகள் கணக்கெடுப்பது, அவற்றுக்கு பதிலாக அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டி தருவது பற்றிய கலந்துரையாடல் கூட்டம் மண்டல அலுவலகத்தில் நடந்தது.

மாநில திட்ட அதிகாரி சண்முக சுந்தரம், குடிசை பகுதிகளை மேம்படுத்துவது குறித்த வரைபடங்களை திரையிட்டு விளக்கினார். புதிய வீடுகள் கட்டும் திட்டத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய மாதிரி வடிவங்களை காண்பித்தார்.

மேலும் அவர் கூறுகையில், சென்னை மாநகராட்சியில் முதல்கட்டமாக ஆலந்தூர் 12வது மண்டலத்தில் இந்த பணி தொடங்கப்பட உள்ளது. ஆலந்தூர் மண்டலத்தில் குடிசைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. 159, 167 ஆகிய வார்டுகள் குடிசைகளே இல்லாத பகுதியாக உள்ளது. மற்ற வார்டுகளில் குடிசைகள் கணக்கெடுக்கப்படும். இந்த பணிகளில் தொண்டு நிறுவனங்கள், பொது நலச்சங்கங்கள் ஈடுபட உள்ளன. அவர்கள் பகுதி பகுதியாக சென்று கணக்கெடுப்பார்கள் என்றார்.

குடிசை பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் மண்டல குழு தலைவர் வெங்கட்ராமன், உதவி கமிஷனர் அன்பழகன், செயற் பொறியாளர் மகேசன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.