Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 5 கடைகள் அகற்றம்

Print PDF
தினத்தந்தி                  24.05.2013

திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 5 கடைகள் அகற்றம்


திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 5 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அப்புறப்படுத்தினர்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் ராஜீவ் காந்தி சிலை அருகில் 3 கடைகள் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தன. இவற்றில் ஓட்டல்கள் இயங்கி வந்தன. இந்த ஓட்டல்களை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடியாக அகற்றினார்கள்.

போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதே போல் வழிவிடுவேல் முருகன் கோவில் அருகில் இருந்த இன்னொரு ஓட்டல், அதனை ஒட்டி இருந்த சாலையோர பூக்கடைகளும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.

அதிரடி தொடரும்

மாநகராட்சி ஆணையர் தண்டபாணி உத்தரவின்படி பொன்மலை கோட்ட உதவி ஆணையர் தனபால், உதவி வருவாய் அதிகாரி பத்மநாதன், உதவி நிர்வாக பொறியாளர் நாகேஷ், உதவி பொறியாளர் ரவீந்திரன் ஆகியோர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தனர்.

திருச்சி ஜங்ஷன் பகுதியில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.