தினமணி 19.09.20099
குழித்துறை நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சோதனை ஓட்டம்
மார்த்தாண்டம், செப். 18: குழித்துறை நகராட்சியால் அமைக்கப்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணி நிறைவடையும் தறுவாயில் உள்ள நிலையில் வெள்ளிக்கிழமை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
குழித்துறை நகராட்சியில் உள்ள 21 வார்டு பகுதி மக்களுக்கும் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து, பொறியாளர்கள் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது.