Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

Print PDF
தினகரன்          02.04.2013

இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி


திருப்பூர்:  திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டலம், முருகம்பாளையம் நடுநிலைப்பள்ளியில், நகர்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. இதில் கமிஷனர் செல்வராஜ் பேசுகையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களின் பொருளதாரத்தை மேம்படுத்துவதற்காக நகர்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கப்படுகிறது. கம்ப்யூட்டர், அழகுகலை, நர்சிங், தையல், எம்ப்ராய்டரி, ஆடை வடிவமைத்தல் உட்பட 10 வகையான தொழில்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். நன்கு பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்யப்படும் என்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி சமுதாய அமைப்பாளர்கள் மங்கையர்க்கரசி, தமிழ்ச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் 4வது மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகம் நன்றி கூறினார்.