Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

Print PDF
தினமணி           08.03.2013

துப்புரவுப் பணியாளர்களுக்கு  பாதுகாப்பு உபகரணங்கள்


பெரியகுளம் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பாதாளச் சாக்கடை பராமரிப்பு பணியாளர்களுக்கு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, நகர்மன்றத் தலைவர் ஓ. ராஜா தலைமை வகித்து, கையுறை, தலைக் கவசம், முக கவசம், இரவு நேரங்களில் பணியாற்றுவதற்காக ஒளிரும் ரெஃப்ளக்ட்டர் கோட் மற்றும் முழங்கால் வரை அணியக்கூடிய பூட்ஸ் ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார் (படம்).

இதில், ஆணையர் (பொறுப்பு) வி. சுப்பிரமணியன், துணைத் தலைவர் ஜி. முகுந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலாளர் ஆர். ரெங்கநாயகி, சுகாதார ஆய்வாளர்கள் எஸ். அகமது கபீர், டி. ஜெயசீலன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.