Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடக்கம்

Print PDF
தினமணி         05.03.2013

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடக்கம்


புதுச்சேரி உப்பளம் தொகுதியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இத்தொகுதியில் புதிய குடிநீர் சுத்ததிகரிப்பு நிலையம் அமைப்பதற்காக ரூ.24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சுத்திகரிப்பு நிலையத்தை அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

விழாவில் பொதுப்பணித்துறை சுகாதார கோட்ட செயற்பொறியாளர் ஜெ.ஜெயக்குமார், உதவிப் பொறியாளர் எஸ்.ரமணி, இளநிலைப் பொறியாளர் கே.ஜெயராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.