Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தில்லியில் வாகன நிறுத்த கட்டணம் உயரக்கூடும்

Print PDF

தினமணி            18.08.2012

தில்லியில் வாகன நிறுத்த கட்டணம் உயரக்கூடும்

புது தில்லி, ஆக. 17: தில்லியில்   வாகன  நிறுத்தக்   கட்டணம்    விரைவில் உயர்த்தப்படக்கூடும் என்று  தெரிகிறது. தில்லி மாநகராட்சிகள்,  புது  தில்லி  முனிசிபல் கவுன்சில், மாசுக் கட்டுபாட்டு ஆணையம், தில்லி மேம்பாட்டு ஆணையம் ஆகிவற்றின் அதிகாரிகள்  துணை  நிலை ஆ ளுநரை வியாழக்கிழமை சந்தித்து தில்லியில் வாகன  நிறுத்தக்  கொள்கை  குறித்து விவாதித்தனர்.அதில் தில்லி   முழுதும்    வாகன    நிறுத்த  மையங்களில்   கட்டணங்களை    உயர்த்துவது     குறித்து பரிந்துரைக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள்  கூறின .  பரிந்துரை   இறுதி   செய்யப்பட்டு    தில்லி பிரதேச  அரசுக்கு   அனுப்பி    வைக்கப்படும்   என்றும்    வாகன நிறுத்த கட்டண உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்  என்றும் அதிகாரிகள்  தரப்பில்  கூறப்படுகிறது. தலைநகரில் தினசரி சராசரியாக 1,200 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

Last Updated on Saturday, 18 August 2012 09:27