Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மீனாட்சி கோயிலிருந்து ஒரு கி.மீ.க்கு அப்பால் கட்டிட உயரத்திற்கு நிபந்தனைகள்

Print PDF

தினகரன்            25.11.2010

மீனாட்சி கோயிலிருந்து ஒரு கி.மீ.க்கு அப்பால் கட்டிட உயரத்திற்கு நிபந்தனைகள்

மதுரை, நவ. 25: மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் சிறப்பு கட்டிடம், மனைப்பிரிவு ஒப்புதல், நிறுவன வரைபட ஒப்புதல் தொடர்பாக பொதுமக்கள் தெரிவிக்கும் குறைபாடுகளை மதுரையில் நகர் ஊரமைப்பு துறை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: மனைப்பிரிவு மற்றும் கட்டிடங்கள் அனுமதி அளிப்பதில் மதுரையில் 1993&ம் மாஸ்டர் பிளான் நடைமுறையில் உள்ளது. நிலத்தின் பயன்பாடு மாறி வருகிறது. உதாரணமாக வயல்வெளிகள் வீட்டு மனைகளாகவும், வர்த்தக கட்டிடங்களாகவும், குடியிருப்பு பகுதிகள் தொழிற்சாலை பகுதியாகவும் மாறி வருகின்றன.

எனவே திருத்திய விதிகளுடன் மதுரைக்கு புதிய மாஸ்டர் பிளான் தயாராகி உள்ளது. அரசு அனுமதி அளித்தால் 3மாதங்களில் அமலாகும். இதன் மூலம் கட்டிட அனுமதி பெறுவது எளிதாக்கப்பட்டு, மதுரையிலேயே அளிக்கப்படும். சென்னைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்த மாஸ்டர் பிளானில் நகரை சுற்றிலும் வளர்ச்சிக்கு ஏற்ப விதிமுறைகள் உருவாக்கப்படும். மதுரையை சுற்றி அவுட்டர் ரிங்ரோடு திட்டம் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருந்து தகவல் கிடைத்ததும் சேர்த்து கொள்ளப்படும்.

மீனாட்சிஅம்மன் கோயிலை சுற்றி வெளிவீதிகள் வரை கட்டிடங்களுக்கு 9மீட்டர் உயர கட்டுப்பாடு உள்ளது. கோயிலில் இருந்து ஒரு கி.மீ.க்கு அப்பால் உயர கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. ஆனால் நிபந்தனைகள் உள்ளன. கட்டிடங்களின் உயரத்திற்கு ஏற்ப சாலையின் அகலம் அகன்றதாக இருக்க வேண் டும். சாலை 12மீட்டர் அகலம் இருந்தால் 24மீட்டர் உயர கட்டிடம், சாலை 15மீ இருந்தால் 30மீ உயர கட்டி டம், 18மீ சாலை இருந்தால் 60மீ உயர கட்டிடம், 30.5 மீ சாலை இருந்தால் 60 மீட்டருக்கு மேல் உயர கட்டிடம் கட்ட அனுமதி அளிக்கப்படும்.மதுரை மாநகராட்சி 4ஆயிரம் சதுரஅடி வரை வரைபட அனுமதி, கட்டிட அனுமதி அளிக்கலாம். அதற்கு மேல் 15ஆயிரம் சதுர அடி வரை மாவட்ட கலெக்டர் தலைமையிலான உள்ளூர் திட்ட குழும அனு மதி பெற வேண்டும். அதற்கு மேல் பரப்புள்ள கட்டிடங்களுக்கு சென்னை யில் அரசு அனுமதி பெற வேண்டும். விதிகள் மீறி இருந்தால் அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு கூறினார்.