தினமலர் 23.11.2010
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு மாநகராட்சி ரூ. 9.40 லட்சம் நிதி ஒதுக்கீடுதிருச்சி
: திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத ஸ்வாமி கோவிலில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழாவில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி 9.40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.திருச்சி ஸ்ரீரங்கத்தில் டிசம்பர் ஆறு முதல் 27ம் தேதி வரை 22 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. இதில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் வருவர். அங்கு சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள 200 தற்காலிக பணியாளர்களை நியமனம், பிளிச்சீங் பவுடர், நீர்த்த சுண்ணாம்பு.பொது சுகாதார தளவாடங்கள், நூவின் ஈ கொல்லி மருந்து, பினாயில், மின்விளக்கு, சிறுநீர் கழிப்பிட வசதி, மருத்துவ கொட்டகை அமைத்தல் ஆகிய செலவினங்களுக்கு9.40 லட்சம் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த தொகைக்கு அனுமதி வேண்டி நேற்று காலை நடந்த மாநகராட்சி அவசரக்கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எவ்வித விவாதமும் இல்லாமல் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.