Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விவசாயிகளுக்கான மழை காப்பீட்டு திட்டத்தில் பிரீமியம் செலுத்த அழைப்பு

Print PDF

தினகரன் 17.08.2010

விவசாயிகளுக்கான மழை காப்பீட்டு திட்டத்தில் பிரீமியம் செலுத்த அழைப்பு

திருவாரூர், ஆக. 17: மத்திய அரசின் வர்ஷ பீமா மழை காப்பீட்டுத் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அக்ரி இன்சூரன்ஸ் நிறுவன கார்ப்பரேட் அதி காரி அப்துல் சலாம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் வர்ஷ பீமா மழை காப்பீட்டு திட்டத்தில் சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் பங்குபெறலாம். ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து பிரீமிய தொகையை ..சி ஆப் இந்தியா லிமிடெட்என்ற முகவரிக்கு டி.டி எடுத்து அனுப்பி இத்திட்டத்தில் சேரலாம்.

ஒரு ஏக்கருக்கு செலுத்த வேண்டிய பிரீமிய தொகை தாலுகா வாரியாக: திருவாரூர் ரூ.469. வலங்கைமான் ரூ.529. நீடாமங்கலம் ரூ.474. மன்னார்குடி ரூ.529. கோட்டூர் ரூ.596. திருத்துறைப்பூண்டி ரூ.596. குடவாசல் ரூ.634. கொரடாச்சேரி ரூ.397. நன்னிலம் ரூ.574. முத்துப்பேட்டை ரூ.518. நாகை மாவட்டத்தில் கொள்ளிடம் ரூ.507. குத்தாலம் ரூ.485. சீர்காழி ரூ.507. செம்பனார்கோவில் ரூ.485. மயிலாடுதுறை ரூ.485. நாகப்பட்டினம் ரூ.557. கீழ்வேளூர் ரூ.518. கீழையூர் ரூ.552. தலைஞாயிறு ரூ.529. வேதாரண்யம் ரூ.552. திருமருகல் ரூ.557. தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை ரூ.474. மதுக்கூர் ரூ.458. ஒரத்தநாடு ரூ.529. மேலும் விவரமறிய 04366&250242, 94437 27240 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.