Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அசுத்தமான ஆறுகளின் எண்ணிக்கை அதிகம்

Print PDF

தினகரன் 10.08.2010

நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அசுத்தமான ஆறுகளின் எண்ணிக்கை அதிகம்

மும்பை, ஆக.10: நாட்டி லேயே மகாராஷ்டிராவில் தான் மாசுபட்ட ஆறுகள் அதிகம் இருப்பது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் ஓடும் ஆறுகளின் தண்ணீர் தரத்தை பரிசோதித்து அதன் அடிப்படையில் மாசுபட்ட ஆறுகளின் பட்டியலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தயாரித்து இருக்கிறது. இதன்படி மகாராஷ் டிராவில் 26 ஆறுகள் மாசுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆறுகளில் புனேயில் உள்ள முலா மற்றும் முத்தா, தானேயில் உள்ள கலு மற்றும் பட்சா, மும்பையில் மித்தி ஆறு ஆகியவையும் அடங்கும். இப்பிரச்னை யால் சுற்றுச்சூழல் ஆர் வலர்கள் கவலை அடைந் துள்ளனர்.

ஆறுகள் அசுத்தமடை வதற்கு தொழிற்சாலை களில் இருந்து வெளியேற்றப் படும் ரசாயன கழிவுகள் மட்டு மின்றி, மாநிலம் முழுவதிலும் நடந்து வரும் நகரமயமாக் கலும் இதற்கு ஒரு காரணம் என்று அவர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

வீடுகளில் இருந்து கொண்டுபோய் கொட்டப் படும் குப்பைகள், தொழிற் சாலை கழிவுகள் மற்றும் சில காரணங்களால் ஆறு கள் அசுத்தமடைவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார்.

ராய்காட் மாவட் டத்தில் ஓடும் குண்டலிகா, சோலாப் பூரில் ஓடும் நீரா மற்றும் நாக்பூர் வழியாக ஓடும் குன்ஹன் ஆகிய ஆறுகள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு களால் அசுத்த மடைந்து விட்டன.

நாடுமுழுவதும் 150 ஆறுகள் மாசு அடைந்து இருப்பது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரிய வந் துள்ளது. நாட்டில் ஓடும் அனைத்து முக்கிய ஆறுகளும் இதில் அடங்கும். மகாராஷ்டிரா வுக்கு அடுத்த படியாக குஜராத்தில்தான் அதிக ஆறுகள் அசுத்த மடைந் துள்ளன. இந்த ஆறுகள் மாசுபட்டதற்கு தொழிற் சாலை கழிவுகளே முக்கிய காரணம்.

ஆறுகள் மாசு படுவதை தடுக்க தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் 20 மாநிலங்களில் உள்ள 38 ஆறுகளில் தான் இத்திட்டம் இப்போது செயல்படுத்தப் பட்டு வருகிறது.

மகாராஷ் டிராவில், பஞ்சகங்கா, தாபி, கிருஷ்ணா மற்றும் கோதா வரி ஆகிய நான்கு ஆறு களை சுத்தப் படுத்துவதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

நாட்டில் உள்ள மெட்ரோ நகரங்களிலேயே மும்பைதான் மிகவும் அழுக் கானது என்று மத்திய அரசு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது மாசுபட்ட ஆறுகள் அதிகம் இருப்பதும் மகாராஷ்டி ராவில்தான் என ஆய் வறிக்கையில் கூறப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.