Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவண்ணாமலை நகராட்சிக்கு ரூ.4 லட்சத்தில் சோடியம் விளக்கு

Print PDF

தினமணி 25.07.2009

திருவண்ணாமலை நகராட்சிக்கு ரூ.4 லட்சத்தில் சோடியம் விளக்கு

திருவண்ணாமலை, ஜூலை 24: திருவண்ணாமலை நகராட்சிக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள சோடியம் விளக்குகளை ரமணாஸ்ரமம் வழங்கியது.

ரமணாஸ்ரமத்தில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அதன் நிர்வாகி வி.எஸ். ரமணன் முதற்கட்டமாக 36 சோடியம் விளக்கு மற்றும் 6 ஹைமாஸ் விளக்குகளை நகராட்சி தலைவர் இரா. ஸ்ரீதரனிடம் வழங்கினார்.

கிரிவலப் பாதை மற்றும் முக்கிய இடங்களில் இந்த விளக்குகள் பொறுத்தப்படும் என்று ஸ்ரீதரன் தெரிவித்தார்.

ஆஸ்ரம நிர்வாகி வி.எஸ். மணி, நகராட்சி ஆணையர் சேகர், பொறியாளர் சந்திரன், நகராட்சி உறுப்பினர்கள் பிரகாஷ், கார்த்திவேல்மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.