மாநகராட்சி பள்ளிக்கு புது மேசை, நாற்காலிகள்

Tuesday, 03 November 2009 06:57 administrator நாளிதழ்௧ள் - ௧ல்வி
Print

தினமணி 3.11.2009

மாநகராட்சி பள்ளிக்கு புது மேசை, நாற்காலிகள்

திருப்பூர், நவ.2: மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகரா ட்சி பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் மேசை, நாற்காலிகளை டி.கே.ரங்கராஜன் எம்பி வழங்கி னார்.

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மகளிர் மே.ப ள்ளியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவிகளின் எண்ணிக்கை க்கு ஏற்ப இப்பள்ளியில் கட்டட வசதி களும், மேசை, நாற்காலிகளும் போதுமானதாக இல்லாமல் உள்ளது.

இந்நிலையில்,கடந்த ஆண்டு திருப்பூர் வந்திருந் த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனி டம் பள்ளியின் நிலை குறித்து பெற்றோர் ஆசிரிய ர் கழக நிர்வாகிகள் விளக்கினர். இதையடுத்து மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.10 லட்சம் மதிப்பில் 177 ஜோடி மேசை, நாற்காலிகள் வரப்பெற்றன.

அவற்றை பள்ளிக்கு வழங்கும் விழா அப்பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடந்தது. பெற் றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜி.ரத்தினசாமி தலைமை தாங்கினார். தலைமையாசிரியை ஏவிஜயாஆனந்தம் வரவேற்றார்.

மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மேசை, நாற்காலிகளை பள்ளி தலைமை ஆசிரியை யிடம் ஒப்படைத்தார். திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமி, மாநில பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழு உறுப்பினர் ஏஈஸ்வரன்,உதவி தலைமையாசிரியை மேரி வினோபாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 03 November 2009 06:58